Wednesday, November 11, 2009

கதம்பம்...


அலையும் கரையும்..

என்னை சுனாமி ஆக்கத்தான்
எத்தனை முறை எட்டித்தொட்டாலும்
தட்டிக் கழிக்கிறாளோ…


கல்லூரி முதல் நாள்…

“நீ இங்கிலிஷ் மீடியமா
தமிழ் மீடியமா”
பழஞ்சாதி மடிந்து
முளைக்குதிங்கே புது வேலி…


உலகம்..

சந்திப்பொன்றில் சிவப்புவிளக்கிற்கு
நின்றவன்
முதுகில் ஒட்டிக்கொண்டது
“சாவு கிராக்கி” பட்டம்…


முப்பதாம் தேதி…

ஆறாயிரம் ரூபாய்ச்
சம்பளக்காரனும்..
அம்பதாயிரம் ரூபாய்ச்
சம்பளக்காரனும்..
சட்டைப் பை சுரண்டும்
சமத்துவ நாள்…


அவசரக் கருணை..

எட்டிநின்று இரக்கம் காட்ட
ஆசையுண்டு எவர்க்கும் - கொஞ்சம்
கிட்ட வந்து உதவிடவே
எண்ணமில்லை யார்க்கும்
இதில் நீயும் நானும் அடக்கம்
இதற்கென்று கொள்வோம் வருத்தம்??

No comments: