Wednesday, September 9, 2009

எல்லாம் இன்பமயம்...


உண்ட உணவு குறைவதில்லை
தின்ற சோறு செரிப்பதில்லை
என்ற குறை சிலருக்கு...
செரித்திடவோ சோறில்லை
பசித்திருந்தால் பாவமில்லை
என்ற நிலை பலருக்கு...
துணி அடுக்க அரையில்லை - புது
உடை பொருந்தச் செருப்பில்லை
என்ற குறை சிலருக்கு...
உடை கிழியா இடமில்லை
உடல் தெரிந்தால் குற்றமில்லை
என்ற நிலை பலருக்கு....
வீட்டில் ஒரு நாதி இல்லை - நிதம்
பெருக்குவதே பெரிய தொல்லை
என்ற குறை சிலருக்கு....
ஒதுங்கிட ஓர் குடிலில்லை - சிறு
குடை கிடைத்தால் கவலையில்லை
என்ற நிலை பலருக்கு...
பலர் நிலை பொறுத்து, குறை தன்
நிறம் மாற்றிடினும்...
அதன் துயர் மாற்றாது
நம் குறை தீராது!
எவர் குறையும் தீர்வதில்லை
நாம் துயர் கொண்டும் பலனில்லை
இதனால்
குறைகளிலே நிறை காண்போம்
நம் துயர் விதைத்து
இன்பப்பயிர் செய்குவோம்!!!!!!!

1 comment:

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்