Thursday, August 6, 2009

நிலவின் நினைவு…

.கண்ணுக்குள் நிலவு..

beautiful-eyes-main_full.jpg

நீலவான மேடையில்

நித்தம் ஓர் நாடகம்

நீர் அறியா ஓடையில்

ஓசையில்லா ஊர்வலம்!!

இருள் குடிக்கும் கருவிழியில்

இரு துண்டாய் உடைகையில்

விழி இரண்டும் குளமாகும்

நீந்தும் ஒளி நிலவாகும்!!!

நிலவே

sdf.jpg

காரிருளில் கைவீசி

கண்ணிமையில் ஒளிவீசி

மேகத்திரை வருடி

மின்னல் ஒளி தாங்கி

நீ நடத்தும் நகர்வலம்

கலைஞனின் கற்பனை மொட்டவிழ்க்கும்

கவிகளின் சொற்களைத்

தொட்டவிழ்க்கும்!!!

5 comments:

தமிழ் காதலன் said...

//நீ நடத்தும் நகர்வலம்

கலைஞனின் கற்பனை மொட்டவிழ்க்கும்

கவிகளின் சொற்களைத்

தொட்டவிழ்க்கும்!!!

//

nice lines,keep it up.

தமிழ் காதலன் said...

plese remove the word verification to ur sttings.my small suggestion,don't misstake me.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல துவக்கம்

பார்த்திபன் said...

தங்களின் கருத்திற்க்கு மிக்க நன்றி... என் தமிழின் காதலரே...
verification - நீக்கப்பட்டுவிட்டது...
மீண்டும் வருக....

பார்த்திபன் said...

மிக்க நன்றி சுரெஷ்...
தாங்கள் பழனியா...

நானும் பழனிதான்.... தற்பொழுது எங்குள்ளீர்கள்...