Sunday, April 17, 2011

இனி..

இவ்வளவு அவ்வளவென்று


சொல்வதற்கு வகையில்லை

கொள்ளளவு எவ்வளவென்று

அளப்பதற்கும் அளவில்லை

கோடியில் கொழுக்காமல்

கொடிகள் விளைவதில்லை

பிள்ளைகள் பிழைப்பானாள்

கொள்ளைகள் பாவமில்லை

பதவிக்கு பங்கமென்றால்

கொள்கைகள் கூட தொல்லை

ஊடகங்கள் ஒளிர்ந்தாலும்

ஊழல்கள் சொல்வதில்லை

உண்மைகள் உரக்க சொல்ல

உணர்வாளர் யாருமில்லை

இனி நாமும் காத்திருந்தால்

பெரும்பிழை வேறில்லை

அடி மேல் அடி வைப்போம்

ஆனதைச் செய்திடுவோம்

ஆதங்கம் கலைந்திடுவோம்
 
இல்லை எனும் சொல் கலைய


இனிக் காத்திருக்க நேரமில்லை

ஒற்றுமையாய் ஊர் சேர

நம் உரிமை நாம் கோர

செய்திடுவோம் புதுக் கவிதை

தலைப்பிடுவோம் "நாம் தமிழர்"

எனும் சொல்லை...

1 comment:

Ayesha said...
This comment has been removed by the author.