Wednesday, October 15, 2008

கர்வம் கொள்


தமிழனே!!!!!!!!
உன் தாய் மொழி தமிழ்
என்று  கர்வம் கொள்!!
உலகின் முதன் மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
வள்ளுவன் வாய்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
மூவாயிரமாண்டு முதுமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
நான்மறை நவின்றது தமிழ்
என்று கர்வம் கொள்!!
ஐம்பெருங்காப்பியம் கண்டது தமிழ்
என்று கர்வம் கொள்!!
ஔவ்வையின் அமுதமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
பாரதியின் பண்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
தொல்காப்பியத் தொன்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
கம்பன் கவிமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
இலக்கியச் செம்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
பாவேந்தரின் படைப்பு மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
கலைஞர் காக்கும் கனிமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
கண்ணதாசனின் காதல் மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
வைரமுத்துவின் வீர மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
சமயங்களின் சந்த மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!

No comments: